ராமநாதபுரம் அள்ளிகண்மாய் மயானகரை பகுதியில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அதிக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியை சுத்தம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.