பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சி பகுதியில் முறையாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் புதுநகர், தட்டான் குளம், நேதாஜி நகர் ஆகிய இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.