மதுரை திருப்பரங்குன்றம் சாமநத்தம் பகுதிகளில் தினந்தோறும் பாலித்தீன் பைகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர். மேலும் அதில் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் .