சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மெயின் சாலையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும்.