சுகாதார சீர்கேடு

Update: 2024-07-21 18:29 GMT

சேலம் மாவட்டம் பாகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓம்சக்தி நகர் உள்ளது. இந்த பகுதியின் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு வாசிகள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தசாமி, பாகல்பட்டி.

மேலும் செய்திகள்