சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 13:43 GMT

தஞ்சையை அடுத்த மேலவெளி ஜெபமாலைபுரம் புதுத்தெருவில் சாக்கடை சுத்தம் செய்வதற்காக வடிகாலில் இருந்து கழிவுகள் வெளியே அள்ளப்பட்டன. அள்ளப்பட்ட கழிவுகள் வடிகால் அருகிலேயே அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்