குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2024-05-12 14:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி கடப்பேரி பகுதியில் அமர்நகர் உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டுவதுடன் அதனை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், உண்டாகும் நச்சு புகையால் கண்ணெரிச்சல் மூச்சுத்திணறல் போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் குப்பையை முழுவதுமாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்