சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 18:35 GMT

சேலம் அரிசிபாளையம் பகுதியில் ரத்தினசாமிபுரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் சாலையின் நடுவே குப்பைகளை கிளறி போடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

-மணி, அரிசிபாளையம்.

மேலும் செய்திகள்