குப்பை எரிப்பது தடுக்கப்படுமா?

Update: 2024-05-05 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான காட்டூர், பெரும்மாட்டு நல்லூர் பகுதிகளுக்கு இடையே குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், அங்கே வசிக்கும் பொதுமக்கள் அடர்ந்த புகையால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு போன்ற இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்