குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2024-04-28 13:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் அருகில் நன்மங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கரைபகுதி முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியே குப்பை கடலாக காட்சியளிக்கிறது. ஏரியின் அருகில் குப்பைகள் கொட்ப்படுவதால் ஏரியின் நீரும் அசுத்தமாகிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், அங்கே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்