சுகாதார சீர்கேடு

Update: 2024-04-28 12:27 GMT

சூலூர் அருகே கரவளி மாதப்பூர் அம்மன் நகர் பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக போர்வெல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த போர்வெல் அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்