சுகாதார சீர்கேடு

Update: 2024-04-28 10:56 GMT

தஞ்சை மேலவெளி ஜெபமாலைபுரம் புதுத்தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வடிகாலை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்