குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-04-28 10:55 GMT

தஞ்சை விளார்சாலை நாவலர் நகர் முதல் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் குவிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்