குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-04-28 10:35 GMT

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் தென்னம்பாளையத்திலிருந்து பட்டுக்கோட்டையார் நகருக்கு செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சாலையோரம் குப்பைகள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு செல்கின்றனர். மேலும் அங்கு குவிக்கப்படும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் அருகில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.எனவே இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா,திருப்பூர்.

9876766272

மேலும் செய்திகள்