அதிகாரிகளின் மெத்தன போக்கு

Update: 2024-03-17 14:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதயில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை நரசங்குப்பம் பகுதயில் உள்ள ஏரி அருகில் கொட்டி தீ வைத்து எரிகின்றனர். இந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி உள்ள வயதானோர், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். எனவே, ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்