குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்

Update: 2024-02-18 15:59 GMT

குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்

திருப்பூர் காந்திநகர் பகுதியில்குப்பைகளை கூட்டி குவித்து வைத்து தீ வைத்துவிடுகின்றனர். இதன் விளைவாக இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் சளிதொந்தரவு உள்ளிட்ட பல நோய்கள் உருவாக காரணமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் நேரம் மற்றும் விடும் நேரங்களில் சாலையில் புகையால் மிகுந்த அவதிப்படுகின்றனர். காந்திநகர் முதல் 3 வீதிகளில் பெரும்பாலும் இச்சம்பவம் நடக்கிறது. மரக்குப்பைகளை அள்ளுவதற்கு தூய்மை பணியாளர்கள் வந்தாலும் அவர்கள் கூட்டி ஒதுக்கி வைத்து தீ வைத்து புகை மூட்டத்தை போட்டு விடுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காந்திநகர், திருப்பூர்.

8987675672

மேலும் செய்திகள்