குப்பை அகற்றப்படுமா?

Update: 2024-02-11 13:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கீழ்கட்டளை அம்பாள்நகரில் உள்ள சர்வீஸ் சாலையில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குடியிருப்புகள் அருகில் குப்பை கொட்டப்பட்டு, தீ வைத்து கொழுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கொட்டிய குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்