நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-02-04 14:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், நெய்குப்பி ஊராட்சி நரசன்குப்பத்தில் சுடுகாடு செல்லும் வழியில் உள்ள ஏாியில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பை ஏாியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அருகில் குடியிருப்பு இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடை பிடிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்