குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 12:10 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சி முக்கூடு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. ஒரு சிலர் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி வீசி செல்கின்றனர். இவற்றால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்