குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-02-04 12:00 GMT

கூடலூர் தாலுகா தேவாலா அட்டி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் பொது இடங்களில் குவிந்து காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம், வீடு, வீடாக குப்பைகள் முறையாக சேகரிக்கப்படாததுதான். இதனால் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே சுகாதாரத்தை பேண நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்