குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 16:23 GMT

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் சூரியன் நகரிலிருந்து தென்னம்பாளையம் செல்லும் சாலையின் அருகே குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. திருப்பூர் தெற்கு தோட்டம், சூரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து சூரியன் நகர் பகுதியில் சாலையோரம் தேக்கி வைத்து பின்னர் அப்புறப்படுத்தி வருகின்றனர். தற்போது இங்கு குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் குவிந்துள்ளது. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தும், குப்பை கொட்டும் இடத்தை மாற்றி அமைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்

==============

ராம்,திருப்பூர்.

9856433411

மேலும் செய்திகள்