குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-12-10 14:33 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த நடுபடுகை வடக்கு வாய்க்கால் கரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிய படி அந்த வழியாக சென்று வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்