குப்பை தொட்டிகள் வைத்தும் பலனில்லை

Update: 2023-12-03 13:23 GMT

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் அண்ணா நகர் ஏரிக்கரை படித்துறை, பாலாம்பாடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி, குடிநீர் குழாய், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மகா மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பை தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் குப்பைகள் குப்பை தொட்டி அருகிலேயே கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்