சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-03 13:00 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி பழவத்தான்கட்டளை கிராமம் விவேகானந்தா நகர் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்