குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-12-03 12:59 GMT

தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை அருகே ரோஸ்லின்நகர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்