குப்பைக்கு தீ

Update: 2023-11-26 10:37 GMT

துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இவை முறையாக அகற்றப்படுவது இல்லை. சில நேரங்களில் குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்