சாலையில் இழுத்துச்செல்லப்படும் குப்பைகள்

Update: 2023-11-26 10:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்களிடம் குப்பைகளை எடுத்து செல்வதற்கான வாகனங்கள் இல்லை. இதனால் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை பெரிய சாக்கில் அள்ளுகின்றனர். பின்பு அதனை கயிற்றால் கட்டி சாலையில் மிகுந்த சிரமத்துடன் இழுத்து செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் குப்பைகள் சாலையில் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் சிரமமின்றி குப்பைகளை அகற்றிட போதிய வாகனங்களை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.




மேலும் செய்திகள்