கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-17 10:54 GMT

வேலூர் சங்கரன்பாளையம் ஆரணி சாலை அருகே பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் மலை போல் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்