குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-05-31 16:21 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. மேலும் வியாபாரிகளின் வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. வாலாஜா நகராட்சி சார்பில் தினமும் குப்பைகளை அகற்றுவதே இல்லை. வருடத்துக்கு ஒருமுறை மயானக்கொள்ளை விழா வரும்போது தான் பத்திரப்பதிவு அலுவலக முன்பக்கம் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்படுகிறது. உடனடியாக வாலாஜா நகராட்சி சார்பில் தினமும் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்வார்களா?

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்