திருப்பத்தூரில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் சாலையில் திருப்பத்தூர் பெரிய ஏரி அருகே அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் குப்பைகளை கொட்டுகிறார்கள். மேலும் இறைச்சி கடைக்காரர்கள் இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டுகிறார்கள். அங்குள்ள நாய், ஆடு, பறவைகள் போன்றவை இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு சாலையிலே இழுத்துச் செல்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தக் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-தண்டபாணி, திருப்பத்தூர்.