திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. திருப்பத்தூர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஏரியில் கொட்டப்படுவதால் ஏரி நீர் முழுவதும் மாசடைந்து பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இறைச்சி கழிவுகளை அங்கேயே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஏரி பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்