ஏரியில் குப்பைகள் கொட்டும் அவலம்

Update: 2023-02-08 16:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கொங்கராம்பட்டு ஊராட்சியில் வேலூர்-ஆரணி சாலையோரம் ஏரி உள்ளது. அந்த ஏரியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. விபத்துகளும் ஏற்படுகிறது. ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கொங்கராம்பட்டு. 

மேலும் செய்திகள்