கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கங்கரையில் உள்ள ஏரியின் அருகே திருப்பத்தூர்-தர்மபுரி சாலையோரம் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன்நாதன், திருப்பத்தூர்.