அள்ளப்படாத குப்பைகள்

Update: 2023-01-29 14:11 GMT
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர், நேதாஜிநகர் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதுஒரு புறம் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இறைச்சி கழிவுகள் கொட்டுவோரை கண்டறிய அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். அவ்வாறு கொட்டுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்