தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-10-16 11:42 GMT

திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் ரெயில்வே கேட் அருகே உள்ள பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்  அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்