குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-09 11:09 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் தொப்பம்பட்டி பிரிவு அருகே தனியார் பள்ளி பின்புறம் குப்பைகள் கொட்டி மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர அந்த குப்பைகளை தெருநாய்கள் சிதறடித்து, சாலையில் போடுகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்