சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் மக்காத குப்பைகளே அதிகம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதுடன், தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?