விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெருவில் தண்ணீர் தொட்டி அருகே குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக கிடக்கிறது. இதனால் அதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைகளை தினந்தோறும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.