குப்பைகள் அள்ளப்படுவதில்லை

Update: 2022-08-13 15:51 GMT
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகள் சேகரிப்பட்டு ஒரு இடத்தில் தொட்டிகளில் வைக்கப்படுகிறது. ஆனால் நகராட்சி சார்பில் அந்த குப்பைகள் உடனடியாக அள்ளப்படுவதில்லை. இதனால் குவிந்து இருக்கும் குப்பைகளை அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் உணவு பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்று கிளறி விட்டு அலங்கோலமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்