சுகாதார சீர்கேடு

Update: 2022-08-10 13:42 GMT

ஊட்டி உழவர் சந்தை முன்பு வீணான காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஆனால் அந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்