குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-09 12:53 GMT
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் பகுதி தேசிய நெடுஞ்சாலை அருகே பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதியை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்