கரூர் அருகே உள்ள காதப்பாறையில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியின் தலைமையிடத்தின் எதிரே சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் சாலையில் பறந்து செல்வதினால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.