குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2022-06-01 14:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம், மோகன் நகரில் உள்ள 5-வது தெரு மற்றும் 6-வது தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார்பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களின் சீரிய நடவடிக்கையால் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும், துணைபுரிந்த தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்