புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-04 09:15 GMT

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்களாக சூழ்ந்துள்ளன. இந்த புதர்களில் பாம்பு, விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.தர்மர், சண்முகபுரம்.

மேலும் செய்திகள்