செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் பெரியார் சாலையில் உள்ள 3-வது மற்றும் 4-வது தெரு சந்திக்கும் இடத்தில் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த இடத்தில் குப்பைகள் குவிந்துள்ளதால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.