காற்று மாசு

Update: 2022-08-02 17:16 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன்குளம் சண்முகம் ஆசிரியர் தெருவில் இருந்து அருந்ததியர் சுடுகாடுக்கு செல்லும் தார்ச்சாலையில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. அவ்வப்போது இந்த குப்பையை சிலர் தீயிட்டும் எரிப்பதால் காற்று மாசடைந்து அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்