சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மின்துறை அலுவலகத்தின் பின்புறம் மயானம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கோழி இறைச்சிகளை கொட்டி செல்கின்றனர். இதனால் மயானத்தை சுற்றி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் கொட்டப்படும் கோழி இறைச்சிகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?