சிவகங்கை நகரின் உள்ள தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. நகரின் சிவன்கோவில் தெரு, சரோஜினி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகள் அதிக அளவில் தேங்கி உள்ளன. தேங்கிய குப்பைகளால் நகரின் சில பகுதிகள் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.