குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-10 11:19 GMT

கோவை கே.கே.புதூர் அம்மாசை தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்