குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-30 10:24 GMT

கோவை மசக்காளிபாளையம் பழனிசாமி கோனார் வீதியில் ஜீவா நகர் செல்லும் வழியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்துள்ள கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்